Thursday, September 2, 2010

குர்ஆன் வசனங்கள் (பிரார்தனைகள்)

0 கருத்துக்கள்
66 : 8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில்பாவ மன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளைஅழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச்செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும்(முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும்அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள்முன்னேயும் வலப்புறமும் விரைந்து செல்லும். எங்கள் இறைவா! எங்கள்ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவர்.

23 : 97. 98. என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும்உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றும் கூறுவீராக! என் இறைவா!என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.

28 : 16. என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவேஎன்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன்மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன்.

7 : 23. எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீஎங்களை மன்னித்து அருள் புரியவில்லையானால்நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.

2 : 286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும்அவருக்குரியதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறுசெய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா!எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள்மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததைஎங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களைமன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை)மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும்கூறுகின்றனர்).

3 : 16. எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள்பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக்காப்பாயாக! என்று அவர்கள் கூறுவார்கள்.

3 : 147. எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில்நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராகஎங்களுக்கு உதவுவாயாக! என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.

26 : 87. (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே!

14 : 40. 41. என் இறைவா! என்னையும் என் சந்ததிகளிலும் தொழுகையைநிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனதுபிரார்த்தனையை ஏற்பாயாக! எங்கள் இறைவா! என்னையும் எனதுபெற்றோரையும் நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும்நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)

3 : 193. உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கிஅழைத்தவரின் அழைப்பைச் செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனேநம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களைமன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக!நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!

44 : 12. எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக!நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்)

3 : 194. எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்குவாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களைஇழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய் (எனவும் அவர்கள் கூறுவார்கள்.)

1 : 4. 5. உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும்தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

3 : 8. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள்உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளைவழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

23 : 109. எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்துஅருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன் என்று எனதுஅடியார்களில் ஒரு சாரார் கூறி வந்தனர்.

2 : 201. எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையைவழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரகவேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்று கூறுவோரும்மனிதர்களில் உள்ளனர்.

28 : 24. அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர்நிழலை நோக்கிச் சென்று என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில்தேவையுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

3 : 38. அப்போது தான் ஸக்கரிய்யா இறைவா! உன்னிடமிருந்து எனக்கொருதூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன் என்றுதம் இறைவனிடம் வேண்டினார்.

7 : 143. நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து அவரிடம் அவரது இறைவன்பேசிய போது என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப்பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதற்கு (இறைவன்) என்னை நீர் பார்க்கவேமுடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில்நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம் என்று கூறினான். அவரதுஇறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸாமூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது நீ தூயவன். உன்னிடம்மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாகஇருக்கிறேன் எனக் கூறினார்.

7 : 126. எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதைநம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று ஃபிர்அவ்னிடம்கூறி விட்டு) எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக!எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக! என்றனர்.

7 : 151. என் இறைவா! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக!எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும்கருணையாளன் என்று (மூஸா) கூறினார்.

11 : 47. இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதைவிட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்துஅருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர்கூறினார்.

21 : 83 84. எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீகருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமதுஇறைவனை அழைத்த போது அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்.அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும்அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்குவழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

27 : 44. இம்மாளிகையில் நுழைவாயாக! என்று அவளிடம் கூறப்பட்டது. அதைஅவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து தனது கீழாடையைக்கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்டமாளிகை என்று அவள் கூறினாள். நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன்.ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டுவிட்டேன் என்று அவள் கூறினாள்.

23 : 118. என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில்சிறந்தவன் என கூறுவீராக!

25 : 65. எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத்தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது என்று அவர்கள்கூறுகின்றனர்.

18 : 10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது எங்கள் இறைவா! உன்அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச்சீராக்குவாயாக! என்றனர்.

26 : 83,84, 85. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னைநல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரைஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும்ஆக்குவாயாக!

20 : 114. உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்து விட்டான்.(முஹம்மதே!) அவனது தூதுச் செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்குமுன் குர்ஆன் விஷயத்தில் அவசரப்படாதீர்! என் இறைவா! எனக்குக்கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!

25 : 74. எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும்மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை)அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக! என்றுஅவர்கள் கூறுகின்றனர்.

27 : 19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். என்இறைவா! என் மீதும் எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்குநான் நன்றி செலுத்தவும் நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும்எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனதுஅருளால் சேர்ப்பாயாக! என்றார்.

60 : 4. உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோஅதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம்.அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும்உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும்உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத்தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான்அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம்கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா!உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல்உன்னிடமே உள்ளது.

60 : 5. எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாகஎங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா!நீயே மிகைத்தவன் ஞானமிக்கவன் (என்றும் பிரார்த்தித்தார்.)

71 : 28. என் இறைவா! என்னையும் எனது பெற்றோரையும் நம்பிக்கைகொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்டஆண்களையும் பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்குஅழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (எனவும் பிரார்த்தித்தார்)

23 : 93 94. என் இறைவா! அவர்கள் எச்சரிக்கப்படுவதை எனக்குக்காட்டினால் என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கிவிடாதே! என்று (முஹம்மதே!) கூறுவீராக!

2 : 128. எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும் எங்கள்வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும்ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித்தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் நிகரற்றஅன்புடையோன்.

3 : 53. எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப்பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!(எனவும் கூறினர்)

5 : 83. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும்போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர்வடிவதை நீர் காண்பீர். எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம்.எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக! என அவர்கள்கூறுகின்றனர்.

12 : 101. என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய்.(பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்!வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும்மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக்கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக! (என்றும்கூறினார்)

20 : 25. என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! என்றார்.

17 : 80. என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக!நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்துஎனக்காக உதவக்கூடிய ஆற்றலை ஏற்படுத்துவாயாக! என கூறுவீராக!

29 : 30. என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்குஉதவுவாயாக! என்று அவர் கூறினார்.

40 : 7. அர்ஷைச் சுமப்போரும் அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப்போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். எங்கள் இறைவா!ஒவ்வொரு பொருளையும் அருளாலும் அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய்.எனவே மன்னிப்புக் கேட்டு உனது பாதையைப் பின்பற்றியோரைமன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக!என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.

40 : 8. எங்கள் இறைவா! அவர்களையும் அவர்களது பெற்றோர்கள்வாழ்க்கைத் துணைகள் மற்றும் அவர்களது சந்ததிகளில் நல்லோரை நீவாக்களித்த நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வாயாக!நீ மிகைத்தவன் ஞானமிக்கவன்.

46 : 15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்குவலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள்.சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும் பால் குடியை மறந்ததும்முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதைஅடையும் போது என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்தஅருட்கொடைக்கு நன்றி செலுத்தவும் நீ பொருந்திக் கொள்ளும்நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனதுசந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகிறான்.

59 : 10. அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும்நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும்மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீதுவெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன் நிகரற்றஅன்புடையோன் என்று கூறுகின்றனர்.

2 : 250. ஜாலூத்தையும் அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்தபோது எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக!எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும்கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! என்றனர்.

10 : 86. உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்துஎங்களைக் காப்பாற்றுவாயாக! (என்றும் கூறினர்)

66 : 11. என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டைஎழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும்என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக்காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கைகொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

17 : 24. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல்இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக!

26 : 169. என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள்செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக! (என்றும்கூறினார்)

10 : 85. அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதிஇழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! என்றுஅவர்கள் கூறினர்.

28 : 21. பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். என் இறைவா!அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!என்றார்.

3 : 191. அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வைநினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச்சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீதூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்றுஅவர்கள் கூறுவார்கள்).

0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!