உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்!
ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை
ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும்
உடன்படாத பொய்யாக இருந்தாலும் அதை
உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!
ஒற்றுமையாக வாழவும் ஓராயிரம் நன்மைகள் செய்ய
உதய கீதம் பாடவும் உதவும் உந்துதல் உணர்ச்சி!
நல்லதைச் செய்ய நாடவைக்கும் உள்ளத்தில்
நனிசிறந்த எண்ணங்களை உருவாக்கும் ஊற்றுக்கண்!
பாசத்தைப் பொழியவும் பகைமையை மறக்கவும்
பசித்தவர்க்கு உதவவும் பரந்த நோக்குடன் அரவணைக்கும் பாமரர்களின் அன்னை! பள்ளம் எது மேடு எதுவென்று பகுத்தறிந்து வாழ்க்கைப் பாதையை நேர்வழிக்கோட்டில் கொண்டு செல்லும் குறிக்கோள்களின் இலக்கு!
பொறாமைத்தீ எரியும்போது புகை வெளி வராமல்
தடுத்து, புத்தியுள்ளவனாக வளர வைக்கும் புனல்!
குறுக்கு வழி செறுக்கு வழியென்றும் நேர்வழிதான்
நித்திரையை கொடுக்கும் நிலையான வழியென்றும்
நினைவுபடுத்தும் நாட்காட்டி!
கொள்ளையடிப்பதை தடுத்து கொள்கைப்பிடிப்பை உருவாக்கும் கருவூலம்!
கண்ட காட்சியே உண்மையென்று உரைக்காமல்
கடுகளவும் தவறு வராமல் தடுக்கும் நவீன கருவி!
கண்கள் போன போக்கில் கருத்தைப் புகவிடாமல்
தடுத்தும் காதில் கேட்பதில் நல்லவைகளை மட்டும்
எடுத்து பிரித்தளிக்கும் அன்னப்பறவை !
கஷ்டம் வரும்போதும் கலகலப்பான சூழ்நிலை
வரும்போதும் கதகதப்பாகவே இருக்கும் வெப்பமானி!
காத தூரம் சென்றாலும் கடுகளவும் பழையதை மறக்காமல் நிரப்பி வைக்கும் நினைவாற்றல்!
காலத்தை உணர்த்தி கடமையைச் செய்ய வைக்கும் கருத்துப் பெட்டகம்! கயவர்களின் உறவை
கருவறுக்கச் செய்து கல்லறைக்கு அனுப்பும் தூதுவன்!
உயர்ந்த வெற்றியை உன்னத நோக்கத்துடன்
அடைய வைக்கும் ஒன்றுபட்ட உலகம்!
ஓராயிரம் வாழ்க்கைக் கனவுகளை உள்ளடக்கி
தேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும் ஒளிரும்
திரைச்சீலை! இறையச்சத்தை உள்ளடக்கி
இயன்றவரை இறைப்புகழ் பாடும் இன்பக்கருவூலம்!
வாள் கொண்டு போரிட்டும் கிட்டாத வெற்றியை
வாய்மொழியால் கிட்ட வைக்கும் பேரரசன்!
நல்லதிலும் கெட்டதிலும் நல்லதை மட்டும்
நாடச்செய்து நற்பெயர் ஈட்டித்தரும் தந்தை!
நாம் ஏன் பிறந்தோம் என்பதை சிந்தித்து
படைப்பின் இரகசியத்தை பயத்துடன் புரிந்து கொண்டு
நல்லதோர் வாழ்க்கை வாழ நலம்பயக்கும்
நடமாடும் பல்கலைக்கழகம்!
இப்படி
நல்லதையே செய்து இறைவனின் அருள்பெற
நாடும் உள்ளம், ஒருசில நேரங்களில்
நரக வாழ்விற்குச் செல்ல பாலம் அமைக்கும்
நாட முடியாத தீயாக எரிகிறதே! ஏன்?
ஒருவேளை இந்த உள்ளம்
ஓர் இறைக்கொள்கையை ஏற்று உன்னத
வேதத்தின் உள்ளார்ந்த போதனையை துறந்து
உத்தம நபியவர்கள் சொன்னதில் ஒன்றைக்கூட
புரிந்து கொள்ளாமல் உலக வாழ்க்கை இன்பத்தை
மட்டும் உயர்ந்ததொரு வாழ்க்கையாகக் கருதி
உறுதியான மரணத்திற்குப்பின் வரும் உயரிய
வாழ்க்கை சுவர்க்கக் கனியை சுவைக்க வைக்கும்
என்ற அல்லாஹ்வின் அருட்கொடையை உணராமல்
இஸ்லாத்தின் ஐங்கடமைகள் எங்குள்ளது
என்று கூடத் தேடாமல் கண்ணிருந்தும் குருடர்களாய்
காதிருந்தும் செவிடர்களாய் கருத்திருந்தும்
மூடர்களாய் கால்கள் நடக்கும்
பாதையே சரியான பாதையென்று கருவறைமுதல்
கல்லறை வரை நிராகரிப்பாளர்களாய் வாழ்ந்துவிட்டு
கண்மூடும் மாந்தர்களே விழித்துக்கொள்ளுங்கள்!
இப்போதாவது.....
எஞ்சிய வாழ்நாளிலாவது வெள்ளமென ஓடும்
உள்ளத்தின் ஒரு சிறு பகுதியாவது இறைவன் பால்
நாடச் செய்யுங்கள்_ இஸ்லாத்தில் இணைந்திருக்கும்
கருத்துக்கள் இணையற்ற கோடிகள் என்பதை உணருங்கள்!
இயற்கையோடு இணைந்து இறைவன்பால் பிணைந்து
இனிய வாழ்க்கை வாழ இன்றாவது
ஏற்றுக்கொள்ளுங்கள் ஓர் உறுதிமொழியை!
உள்ளத்தில் ஒளி வேண்டுமா? ஓடுங்கள் இறைவனிடம்!
முயன்றால் முடியாதது ஒன்று உலகத்தில் உள்ளதா?
இல்லையே! எதையும் சாதிக்கும் எண்ணத்தில்
நிய்யத் ஒன்றை நிதானமாக ஏற்படுத்திக்
கொள்ளுங்கள! நின்று நிதானித்து யோசியுங்கள்!
நிறைவேற்றும் வல்லமையை நீதிமிகு இறைவன்
வழங்க நம்மை நெருங்கி வருகின்றான்!
நெஞ்சை நிமிர்த்துங்கள்! நேர்வழி வாழ நிறைவுடைய
வாழ்வளிக்கும் இறைக் கட்டளைகளை நிறைவேற்ற
நில்லாமல் ஓடுங்கள்! அப்படி நிறைவேற்றிவிட்டால்
உங்களின் இந்தப் புனித ஓட்டம் ஒருநாள்
நின்றபின் புரிந்துகொள்வீர்கள் சொர்க்கத்தில்!!
SOURCE: INTERNET.
vanjoor
உங்களுக்கே.!!!
அருட்கொடையாம் தொழுகை
ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி
உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?
ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.
இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.
ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்
இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?
உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.
இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.
உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற
உண்மை உணர்ந்தீரா?
தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,
நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?
உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.
பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.
இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.
தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."
தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.
தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.
தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.
நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.
வாஞ்சையுடன் வாஞ்சூர்.
திருக்குர்ஆன் 3:104
"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்."
.......... க்ளிக் செய்யுங்கள்
***************
திருக்குரானில்
அதிசயத்தக்க சான்றுகள்.
....................
நேரடியாக காணுங்கள் !!!!
மஸ்ஜிதில் ஹரம் - மக்கா
********
மஸ்ஜிதுன் நபவி மதினா
*******
உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?
நபிமொழி அறிவோம்!
செய்தீர்களா?
1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?
2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?
3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?
4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?
5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?
6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?
7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?
8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?
9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?
10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)
11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?
12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?
13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?
14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?
15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?
16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?
17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?
18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?
19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?
20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?
21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?
22. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)
23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?
24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?
25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?
26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?
27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?
28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?
29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?
அஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா? 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?
31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?
32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?
33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?
34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?
35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?
36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?
2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?
3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?
4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?
5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?
6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?
7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?
8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?
9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?
10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)
11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?
12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?
13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?
14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?
15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?
16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?
17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?
18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?
19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?
20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?
21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?
22. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)
23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?
24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?
25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?
26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?
27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?
28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?
29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?
அஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா? 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?
31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?
32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?
33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?
34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?
35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?
36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?
வெள்ளிக்கிழமைகளில்
37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா?
38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா?
39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா?
40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா?
ஒரு வாரத்துக்கு - சிறப்பாக
1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா?
2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா? யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா?
3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா?
4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா?
5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா?
....................
ஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்
அதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்
பதிவர்கள்
- 'ஒருவனின்' அடிமை (7)
- அபு இஸாரா (1)
- அபூ முஹை (1)
- அன்னு (2)
- அஸ்மா (1)
- ஆயிஷா அபுல் (2)
- ஆஷிக் அஹ்மத் (24)
- குலாம் (26)
- சுவனப்பிரியன் (1)
- பி.ஏ. ஷேக் தாவூத் (1)
- மஸ்தூக்கா (9)
- முஹம்மத் ஆஷிக்_citizen of world (6)
- ருக்கயா அப்துல்லாஹ் (2)
- வாஞ்ஜுர் (12)
- ஜாஃபர் (1)
- ஜெமில் (5)
- ஹாஜா (5)
- ஹைதர் அலி (1)
பிரிவுகள்
synthetic cell
(1)
அழகிய முகமன்
(1)
ஆதம் (அலை)
(1)
இணைவைத்தல்
(2)
இறைத்தூதர் வரலாறு
(1)
இன இழிவு
(1)
இஸ்லாம்
(25)
உதவி
(1)
உலகம்
(3)
எய்ட்ஸ்
(1)
ஏழை வரி
(1)
ஏற்றத்தாழ்வு
(1)
கடவுள்
(8)
குர்ஆன்
(4)
குற்றச்சாட்டுகள்
(2)
சகோதரத்துவம்
(3)
சிந்திக்க
(4)
சொர்க்கம்
(1)
டாட்டூ
(1)
திரித்தல்
(1)
தீர்வுகள்
(1)
நகைச்சுவை
(1)
நபித்தோழர்கள்
(1)
நாத்திகம்
(12)
நிகாப்
(1)
நோய் பாக்டீரியா
(1)
நோன்பாளி
(2)
பரிணாமவியல்
(3)
பரிந்துரை
(1)
பாதுகாப்பு
(1)
பெண்கள்
(2)
மன்னிக்கப்படாத பாவம்
(1)
மஸ்ஜித் அல் அக்ஸா
(1)
முஸ்லீம் மீடியா
(1)
ரமழான்
(3)
வரலாறு
(3)
ஜக்காத்
(2)
ஹஜ்
(1)
ஹிஜாப்
(3)
Wednesday, August 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment
அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.
நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!