Showing posts with label துறவறம். Show all posts
Showing posts with label துறவறம். Show all posts

Monday, June 11, 2012

திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?

4 கருத்துக்கள்
பள்ளிப்படிப்பில் குறிப்பாக தமிழ் செய்யுட்பகுதிகளில் துறவறம் குறித்து சற்று உயர்வாகத்தான் கூறப்பட்டிருந்தது..! மேலும், மணம்  செய்து 'இல்லறம்'புரிந்து வாழ்வது குறித்து கூறப்படும்போது 'சிற்றின்பம்' என்றும், எப்போதும் இறைசிந்தையில் திளைத்து விடுவதாக சொல்லிக்கொண்டு,  காவிபூண்டு தம் வாழ்வில் 'துறவறம்' பூண்டு வாழ்தல்  'பேரின்பம்' என்றும் வகைப்படுத்தி வைத்திருப்பர்..! 
.
இதில் நாம் கவனிக்க வேண்டியது... 'துறவி'யாக வாழ்தல் 'அறம்' என்று அறிவுறுத்தப்படுகிறது..! நடைமுறைக்கு ஒவ்வாத... பயிற்றுவிப்பவரே தம் வாழிவில் வெறுக்கக்கூடிய ஒன்று எப்படி நல்லறமாகும்..? 'சிறுமையும்.. பெருமையும் அதெப்படி ஒரே தரநிலையில் 'அறம்' என்றாக முடியும்..?' இது தவறான கல்வி அல்லவா..? ஆகவே... "இல்லறமே நல்லறம்..!" "துறவு என்பது ஓர் அறமே அல்ல..!" இப்படி புரிதலே சரியான புரிதல் அல்லவா..?