சென்ற வருடம் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வோர் வாரமும், இரண்டு நாள், இரவு அரை மணி நேரம் "ஒற்றுமை வேண்டி" ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒற்றுமைப்படுத்தி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான ஒரே ஒரு "முஸ்லிம் இயக்கமாக" உருவாக்கிவிடுவது என்ற ஒரு நல்ல நோக்கத்தில் அனைத்து இயக்கங்களையும் தனித்தனியாக அழைத்து "ஒன்று படுங்களேன்" என்று மிகுந்த பொருட்செலவில் ஒற்றுமைக்கான அறிவுரை கூறப்பட்டது. பலவாரங்கள் நான் அதை பார்த்து வந்தேன். இறுதியில் விளைவு பூஜ்யம்..! ஏன்..? எதனால்..? எப்படி இந்த ஒற்றுமை முயற்சி நம் இயக்கங்களிடையே பலனளிக்காமல் போனது..? என்ன தவறு நேர்ந்தது இதில்..? ஏனோ இதை யாருமே சிந்திக்கவில்லை..! 'எதனால் பிரிந்தனர்', 'அதற்கு என்ன காரணம்', 'அதனை இப்போது தீர்க்க வழியுண்டா'... என்றெல்லாம் விவாதிக்காமல், வெறுமனே "ஒன்று படுங்கள்" "ஒன்று படுங்கள்" எனப்பட்டனர். அதனால், யாருமே ஒன்று படவில்லை. ஆனாலும், அதேபோன்ற "ஒற்றுமை வேண்டும்" என்ற கோஷம் மட்டும் இன்னும் தொடரத்தான் செய்கிறது.
சகோ..! நான் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்லன். அது ரொம்ப அவசியம் நமக்கு. ஆனால், அதை உண்டாக்க நாமாக நம் இஷ்டத்துக்கு ஏனோ தானோ என்று முயற்சி செய்யாமல்... இவ்விஷயத்தில் அல்லாஹ் சுபஹானஹுதஆலாவும் அவனின் திருத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியில் முயற்சிப்பதே நம்மிடையே ஒற்றுமை ஏற்பட முழுப்பலனளிக்கும் என்று மிக உறுதியாக தெரிவிக்கவே இந்த பதிவு..!
சகோ..! நான் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்லன். அது ரொம்ப அவசியம் நமக்கு. ஆனால், அதை உண்டாக்க நாமாக நம் இஷ்டத்துக்கு ஏனோ தானோ என்று முயற்சி செய்யாமல்... இவ்விஷயத்தில் அல்லாஹ் சுபஹானஹுதஆலாவும் அவனின் திருத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியில் முயற்சிப்பதே நம்மிடையே ஒற்றுமை ஏற்பட முழுப்பலனளிக்கும் என்று மிக உறுதியாக தெரிவிக்கவே இந்த பதிவு..!
